கடலூர் மாநகராட்சி சிவானந்தபுரத்தில் குடிநீர் பைப் உடைந்து சாலைகளில் தண்ணீர் பாய்ந்து கொண்டு இருந்தது. இதனை கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா தாமரைச்செல்வன் நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக அதனை சரி செய்வதற்கு உரிய பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். உடன் விசிக மாவட்ட செயலாளர் செந்தில் சிவானந்தபுரம் கிராம பெரியோர்கள் கணேசன், சீனிவாசன் மற்றும் விசிக நிர்வாகிகள் காட்டு ராஜா சலீம் ஆகியோர் உள்ளனர்.