கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார் தலைமையில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் காவல் துறையினர் நேற்று(அக்.4) கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடித்துவிட்டு யாரேனும் வாகனங்களை ஓட்டிச் செல்கிறார்களா? உரிய ஆவணங்களுடன் வாகனங்கள் இயக்கப்படுகிறதா? என தீவிர சோதனை நடத்தினர்.
இதில் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை ஓட்டிச் சென்றது, குடித்து விட்டு வாகனங்களை இயக்கியது, ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்தது உள்பட போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 150 க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.