கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயம் மற்றும் செம்மண்டலம் அருகே நண்பர்கள் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஜய கணபதி உள்ளிட்ட பல விநாயகர் கோவில்களில் சதுர்த்தியை முன்னிட்டு இன்று இரவு விநாயகருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.