கடலூர் மாவட்டம் சாவடி பகுதியில் உள்ள இருசக்கர வாகனத்தில் பாம்பு ஒன்று உள்ளதாக பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் செல்லா லாவகமாக பாம்பை பிடித்து காப்பு காட்டிற்கு விட எடுத்து சென்றார். இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.