கடலூர் மாவட்டம், அண்ணாமலைநகர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு பொது நிதியின் கீழ் ரூபாய் 110 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள அலுவலக கட்டடத்தை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர் இரா. சரண்யா மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.