கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS தலைமையில் நேற்று 26. 3. 2025 தேதி கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்ட அரங்கில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன் பெட்டிஷன் மேளாவில் கலந்து கொண்டார்.