கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே வட்டத்தூர் கிராமத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் நேற்றிரவு (டிசம்பர் 21) முதலை ஒன்று புகுந்ததாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து முதலையை பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த முதலையை சிதம்பரம் அருகே உள்ள வாள்காரமேடு ஏரியில் கொண்டு போய்விட்டனர். பிடிப்பட்ட முதலை சுமார் 5 அடி நீளம் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.