இந்தி திணிப்பை எதிர்த்து களமாடி உயிர்நீத்த மொழிப்போர் ஈகியருக்கு சென்னையில் 'மணிமண்டபம்' அமைக்க வேண்டும். இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிர்நீத்த அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன் அவர்களுக்கு பரங்கிப்பேட்டையில் நினைவுச் சின்னத்தை எழுப்ப வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அருகில் அமைந்துள்ள மேம்பாலத்திற்கு ராஜேந்திரன் பெயரை சூட்ட வேண்டும் என தமிழ்நாடு முதல்வரை சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.