கடலூர் மாவட்டம் புவனகிரி கடைவீதி மெயின் சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லிகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இவ்வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் மண், ஜல்லி உள்ளிட்டவை ஏற்றி செல்கின்றன. இந்நிலையில் சில ஓட்டுனர்களின் கவனக்குறைவால் ரோட்டில் சிதறும் ஜல்லி, மணல்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.