கடலூர் மாவட்டம் புவனகிரி ரோட்டரி சங்கம் சார்பில் அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் இன்று வள்ளலார் ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. தலைவர் கதிரவன், பொருளாளர் ராமலிங்கம் தலைமையில் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பொது மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
மேலும், இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் சுதர்சன், சேஷாத்திரி, ஹபீப் ரகுமான் மற்றும் கிருஷ்ணராஜ் கலந்து கொண்டனர். முடிவில், பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.