கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஆதிவராக நல்லூர் பகுதியில் சாலையோரம் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் சடலமாக கிடந்த நபர் சிதம்பரம் மாரியப்பா நகரை சேர்ந்த தியாகராஜன் (வயது 55) என்பதை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.