கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மருதுார் சப் இன்ஸ்பெக்டர் கனகராஜ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது வத்தராாயன் தெத்து வெள்ளாற்றில் மணலை திருடி மூட்டையாக கட்டி இரு பைக்கில் கடத்தி சென்றனர். இருவரையும் பிடித்து விசாரித்ததில் வாண்டியாங்குப்பம் ஞானசேகர், மற்றும் வத்ராயன் தெத்து ஆனந்தபாபு என்பது தெரியவந்தது. பின்னர் மருதூர் காவல் துறையினர் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.