ராணுவ கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' எனக் குறிப்பிட்டு, மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியிருந்தார். அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தாமாக முன்வந்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம்" என குன்வார் விஜய் ஷா பேசியிருந்தார்.