தீபிகா மற்றும் ஜான் டி பிரிட்டோ ஆகியோர் கடந்த ஓராண்டாக காதலித்து வந்த நிலையில், புதுச்சேரி கடல் பகுதியில் 5 கிலோமீட்டர் தூரத்தில் 50 அடி ஆழத்தில் திருமண கோலத்தில் இருவரும் இன்று மோதிரம் மாற்றிக் கொண்டனர். இது குறித்து அவர்கள் கூறிய போது, “கடல் பாதுகாப்பு மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும். கடல் வாழ் உயிரினங்கள் ஆரோக்கியமாக இருக்க கடல் மாசுபாட்டை தடுக்க வலியுறுத்தும் வகையில் இப்படி திருமணம் செய்துகொண்டதாக கூறியுள்ளனர்.