15 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்.. கட்டடத் தொழிலாளி கைது

84பார்த்தது
15 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்.. கட்டடத் தொழிலாளி கைது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கோயில் திருவிழாவுக்கு சென்ற 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டடத் தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். 15 வயது சிறுமி, தனது குடும்பத்தினருடன் சென்ற நிலையில் தனியாக இருந்த நேரம்பார்த்து, அதே பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி ராஜபாண்டி (35) என்பவர் சிறுமியை தனி அறைக்கு இழுத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி