கீறல் விழுந்த முட்டைகளில் சால்மனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் வளர்கின்றன. இது உடலுக்குள் நுழைந்தால் வயிற்றுப் போக்கு, காய்ச்சல், வாந்தி, வயிற்றுப் பிடிப்புகள் போன்ற கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். குடலில் ஏற்படும் தொற்றுகள், ரத்த நாளங்களுக்கு பரவினால் மரணம் கூட ஏற்படலாம். எனவே முட்டையை சரியான முறையில் வேகவைத்து உண்ண வேண்டியது அவசியம். சேதமடைந்த, கீறல் விழுந்த, உடைந்த முட்டைகளை வாங்க வேண்டாம்.