வேலூர்: பைக் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்கள் இருவர் பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுக் கொண்டிருந்தனர். லாரியை முந்திச் செல்ல மாணவன் முயன்றபோது பைக் விபத்துக்குள்ளானது. இதில், காட்பாடி பகுதியை சேர்ந்த நகீம் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக்கில் பயணித்த மற்றொரு மாணவன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.