வால்பாறை: யானை தாக்கி இளைஞர் பலி!

78பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரள மாநிலம் மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதிக்கு அருகேயுள்ள அரிச்சல்பட்டி ஆதிவாசி கிராமத்தைச் சேர்ந்த தம்பான் என்பவரின் மகன் ஜெபஸ்டீன் (20) என்பவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ஜெபஸ்டீன் தேன் எடுப்பதற்காக வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். இரவு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அவரைத் தேடிச் சென்றுள்ளனர். அப்போது, வனப்பகுதியில் ஜெபஸ்டீன் காட்டு யானை தாக்கி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவருடன் சென்ற நபர் ஒருவர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக வனத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஜெபஸ்டீனின் உடலை மீட்டு சாலக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து வனத்துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி