கோவை இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குட்டி கிருஷ்ணன். இவருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சிந்தாமணி (30) என்ற பெண்ணுடன் காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். நேற்று (டிச.23) காலை குட்டி கிருஷ்ணன் செல்போன் மூலம் சிந்தாமணியின் தாயார் சுந்தரிக்கு அழைத்து பேசியிருந்தார்.
அப்போது தனக்கும் தனது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் சமாதானம் செய்து வைக்குமாறும் குட்டி கிருஷ்ணன் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து சிந்தாமணியின் தாயார் சுந்தரி தனது மகளின் வீட்டிற்கு நேற்று மதியம் வந்துள்ளார். அப்போது சிந்தாமணி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவர் குட்டி கிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது பற்றிய தகவல் அறிந்த கவுண்டம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.