கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தன்யா (வயது 20) என்பவர் கோவை சுங்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி நர்சாக பணியாற்றி வந்தார். நேற்று (ஜன.3) மருத்துவமனையின் மூன்றாவது மாடிக்கு சென்ற இவர் திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
இந்த சம்பவத்தில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த தன்யா, உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தற்கொலைக்கு முயற்சி செய்ததற்கான காரணம் குறித்து ராமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.