பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவை, பொள்ளாச்சி வழித் தடத்தில் சென்னை- மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 11ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் சென்னை-மதுரை சிறப்பு ரயில் (எண்: 06067) மறுநாள் காலை 5 மணிக்கு மதுரை நிலையத்தைச் சென்றடையும்.மறு மார்க்கத்தில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஜனவரி 12ஆம் தேதி இரவு 7 மணிக்குப் புறப்படும் மதுரை சென்னை சிறப்பு ரயில் (எண்: 06068) மறுநாள் காலை 9.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தைச் சென்றடையும்.
இந்த ரயிலானது திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சாமல்பட்டி, பொம்மிடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.