கோவை: கல்லறைத் தோட்டத்தில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்

61பார்த்தது
கோவை: கல்லறைத் தோட்டத்தில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்
துடியலூர் என். ஜி. ஜி. ஓ காலனி அருகே அமைந்துள்ள கல்லறைத் தோட்டத்தில் இருந்து இரண்டு சந்தன மரங்கள் நேற்று வெட்டி கடத்தப்பட்டுள்ளன. இத்தோட்டத்தில் சந்தன மரம் உட்பட பல்வேறு வகையான மரங்கள் அடர்ந்த புதர் போல வளர்ந்துள்ளன. இந்நிலையில், நேற்று நன்கு வளர்ந்திருந்த இரண்டு சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். 

வெட்டப்பட்ட மரங்களின் சிறிய துண்டுகள் அப்பகுதியில் சிதறிக் கிடந்தன. இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி