கோவை, கணபதி அக்ரஹாரத்தைச் சேர்ந்த சிவராஜ்-உதயநிதி தம்பதியின் எட்டு வயது மகன் சிறுவன், நேற்று மாலை தனது வீட்டின் அருகே இருந்த எலெக்ட்ரிக் கடை முன்பு விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த இரும்பு கேட் திடீரென சரிந்து சிறுவன் மீது விழுந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், எலெக்ட்ரிக் கடை உரிமையாளர்கள் கோவிந்தராஜ் மற்றும் சிவ ஆனந்த ஆகியோர் மீது போலீசார் கவனக்குறைவாக இருந்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.