பொள்ளாச்சி: பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய குடிபோதை கும்பல்

83பார்த்தது
பொள்ளாச்சி: பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய குடிபோதை கும்பல்
பொள்ளாச்சி அருகே நடுப்புணியில் உள்ள ஆர். ஆர். ஏஜென்சி இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் ஊழியரை குடிபோதைக் கும்பல் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின்று, பெட்ரோல் பங்கில் மேலாளராக பணிபுரியும் சதாசிவம் (41) அலுவலகத்தில் இருந்தார்.

ஊழியர்கள் சாஹுல், தனலட்சுமி, மகேஷ்வரி மற்றும் சபரி ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது, இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் நிரப்பும்படி கேட்டுள்ளனர். 

பெண் ஊழியர் தனலட்சுமி எவ்வளவு பெட்ரோல் வேண்டும் என்று கேட்டதற்கு, அவர்கள் 50,000 ரூபாய்க்கு நிரப்பு என்று தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதனை சதாசிவம் தடுத்துநிறுத்தியபோது, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, கையை பிடித்து இழுத்து, பலமுறை கன்னத்தில் அறைந்துள்ளனர். 

மேலும், கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி