பேரூர்: அடுத்தடுத்து 2 வீடுகளில் பயங்கர கொள்ளை

66பார்த்தது
பேரூர்: அடுத்தடுத்து 2 வீடுகளில் பயங்கர கொள்ளை
கோவை மாவட்டம் பேரூர் அருகே பச்சாபாளையம் மற்றும் தீத்திப்பாளையம் பகுதிகளில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் பயங்கர கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. பச்சாபாளையம் தபால்தந்தி நகரை சேர்ந்த பூவாத்தாள் (வயது 73) என்பவர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றிருந்த நிலையில், மதியம் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 கிராம் தங்க நகை மற்றும் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. 

இதேபோல், தீத்திப்பாளையம் விவேகானந்தா நகரில் உள்ள ஒரு வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளனர். இந்த இரண்டு சம்பவங்களிலும் மர்ம நபர்கள் அரிவாளுடன் வீடுகளுக்குள் நுழைந்து கைவரிசை காட்டியுள்ளனர். இது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேரூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி