தாங்கள் அனைவரும் கோவை காந்திபுரம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருவதாகவும் பிரபல நிறுவனமான பூர்விகா மொபைல்ஸ் நிறுவனத்துடன் கடந்த 12 ஆண்டுகளாக இணைப்பில் உள்ள தாங்கள் லட்சக் கணக்கில் வரவு செலவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அந்த நிறுவனத்திலிருந்து முறையாக பணம் கொடுத்து வாங்கப்பட்ட செல்போன்களை தாங்கள் வியாபாரம் செய்து வந்ததாகவும் தற்போது அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ஒரு சிலர் மோசடியில் ஈடுபட்ட சூழலில் அங்கிருந்து வாங்கி தாங்கள் விற்பனை செய்த செல்போன்கள் திருட்டு செல்போன்கள் எனக்கூறி தங்களது வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்ட பூர்விகா நிர்வாகத்தினர் மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம் சாட்டினர்.