சரவணம்பட்டி பகுதியில் இந்திய கூட்டணி கட்சி சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 18-வது மக்களவை தேர்தலின் முடிவுகள் இன்று காலை முதல் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வென்றுள்ளது.
தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு. க. ஸ்டாலின் தேர்தலில் பங்கேற்ற கூட்டணி கட்சிகள், தோழமை அமைப்புகளுக்கும் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்தார். இந்நிலையில் இன்று மாலை தமிழகம் முழுவதும் இந்திய கூட்டணி கட்சிகள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் பாஜக தேசிய தலைவர் அண்ணாமலையை ஒரு லட்சத்திற்கும் மேலான அதிக வாக்குகளில் கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றுள்ளார். இதனை கொண்டாடும் விதமாக, கோவை சரவணம்பட்டி 10வது வார்டு மாமன்ற உறுப்பினர், கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் தலைமையில் சரவணம்பட்டி பகுதிக்குட்பட்ட அம்மன் நகர் பகுதியில் இந்திய கூட்டணி கட்சியுடன் இணைந்து பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தனர். இதில் வட்டக் கழகச் செயலாளர்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியை சார்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.