கோவை: டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் மகன் கைது!

54பார்த்தது
கோவை சாய்பாபா காலனி என். எஸ். ஆர் சாலையில் பிரபல டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வரும் விஜயராஜின் மகன் அஜய் கண்ணன், சமூக ஊடகங்களில் பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து மிரட்டி வந்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக, தனது நெருங்கிய உறவினரின் மனைவி மற்றும் மகளின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து, அவர்களின் தொலைபேசி எண்களை சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த உறவினர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையில், அஜய் கண்ணன் ஏற்கனவே சென்னையில் உறவினர் பெண்களை தவறாக சித்தரித்த வழக்கில் சிக்கியதும், மேலும் பல இளம் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அஜய் கண்ணனை கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி