கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண். 60க்குட்பட்ட வரதராஜபுரம் பகுதியில் சூயஸ் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு. மா. சிவகுரு பிரபாகரன் இ. ஆ. ப. , அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, குடிநீரில் உள்ள குளோரின் அளவு குறித்து ஆய்வு செய்தார். உடன் மாநகர தலைமைப் பொறியாளர் திரு. அன்பழகன், மாநகர நல அலுவலர் மரு. கே. பூபதி, உதவி ஆணையர் திருமதி. கவிதா, செயற்பொறியாளர்கள் திரு. கருப்பசாமி, திரு. முருகேசன், உதவி செயற்பொறியாளர் திருமதி. ஹேமலதா, உதவி பொறியாளர்கள், சூயஸ் நிறுவன அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்