ரயில்வே துறை திட்டம் மக்கள் கொந்தளிப்பு

1067பார்த்தது
ரயில்வே துறை திட்டம் மக்கள் கொந்தளிப்பு
கோவை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக தென்னக ரயில்வேக்கு அதிக வருவாய் தரும் ரயில் நிலையமாக கோவை மத்திய ரயில் நிலையம் உள்ளது. ஏற்கனவே வடகோவையில் இருந்து இருகூர் வரை இருவழிப்பாதை பணிகள் நடைபெறுவதால் கோவை மத்திய ரயில் நிலையம் வழியாக சென்ற 13 ரயில்கள் போத்தனூர் வழியாக திருப்பி விடப்பட்டன. கடந்த 2012ல் இந்த பணிகள் முடிவடைந்தும் தொடர்ந்து அதே வழியிலேயே ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்களில் சில இன்றளவிலும் கோவை மத்திய ரயில் நிலையத்திற்கு வந்து செல்வதில்லை. இந்த சூழலில், கோவை வழியாக செல்லும் 6 ரயில்கள் கோவை வராமல் போத்தனூர் வழியாக செல்ல சேலம் கோட்ட எம். பி. , க்கள் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் 6 விரைவு ரயில்கள், அதிவிரைவு ரயில்கள் கோவை ரயில் நிலையம் வராமல் இருகூர், போத்தனூர் வழியாக இயக்க இந்திய ரயில்வே துறை திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது. ஆலப்புழா, சென்னை விரைவு ரயில், திருவனந்தபுரம் புதுடில்லி விரைவு ரயில், கன்னியாகுமரி டிப்ரோக்கர் விவேக் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம், பாட்னா விரைவு ரயில். கொச்சி வேலி எஸ்வந்த்பூர் விரைவு ரயில். எர்ணாகுளம், பாட்னா அதிவிரைவு ரயில் உட்பட 6 ரயில்களை கோவை ரயில் நிலையம் வராமல் இயக்க ரயில்வேத்துறை திட்டமிட்டு வருகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி