கோவை: கூலி தொழிலாளியிடம் வழிப்பறி முயற்சி- இளைஞர் கைது!

58பார்த்தது
கோவை மாவட்டம் சூலூர், ராசிபாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஸ்ரீதர் (25) என்பவர் நேற்று இரவு தனது அண்ணன் கனகராஜூடன் பைக்கில் கணியூர் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர்களை வழிமறித்த ஒரு நபர், அரிவாளைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார்.
அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை உணர்ந்த அந்த நபர், உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து ஸ்ரீதர் அளித்த புகாரின் பேரில், சூலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், கொள்ளுபாளையத்தைச் சேர்ந்த சந்தனகுமார் (21) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி