கோவை: கான்கிரீட் வீடுகள் கேட்டு மக்கள் கோரிக்கை

67பார்த்தது
கோவை மாவட்டம், சூலூர் அருகே சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட செஞ்சேரி ஆதிதிராவிடர் காலனியில் 1984-ஆம் ஆண்டு கட்டப்பட்ட அரசு வீடுகள் தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளன. மேற்கூரைகள் பெயர்ந்து விழும் அபாயத்திலும், சுவர்கள் இடியும் நிலையிலும் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

 தங்கள் வீடுகள் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதாகவும், இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், அரசு உடனடியாக தலையிட்டு தங்களுக்குப் புதிய கான்கிரீட் வீடுகள் அமைத்துத் தரவேண்டும் என்றும், இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்றும் அவர்கள் இன்று எச்சரித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தொடர்புடைய செய்தி