உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் சூலூர் பகுதியில் மாபெரும் மரம் நடு விழா இன்று நடைபெற்றது. இதில் மொத்தம் 30,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. அய்யன் திருவள்ளுவர் நகரில் நடைபெற்ற விழாவில், குற்றவியல் நீதித்துறை நடுவர் அருண்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.
சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், செயல் அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் விழாவில் கலந்துகொண்டனர். கணியூர் பகுதியில் நடந்த விழாவில், கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார் பங்கேற்று பனை மரக்கன்றுகளை நடவு செய்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழியும் பொதுமக்களால் ஏற்கப்பட்டது. சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைத்துக்கொள்ள தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது என்று எம்.பி. கணபதி ராஜ்குமார் தெரிவித்தார்.