காமாட்சிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதாஞ்சலி ஆண்டறிக்கை வாசித்தார். இருகூர் பேரூராட்சி துணைத் தலைவர் ஜெயக்குமார், வார்டு கவுன்சிலர் முருகசாமி, ஆவாரம்பாளையம் சர்வோதய சங்க மேலாளர் பழனிச்சாமி, கோவை மாவட்ட கிழக்கு வியாபாரிகள் சங்கத் தலைவர் செல்வின் ராஜா மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. மேலும், கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கிய மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினர். மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் திறமைகளை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். விழாவின் முடிவில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் நன்றி கூறினார்.