கோவை: தேரோட்டம் - ஜூஸ், பழ வகைகள் வழங்கிய இஸ்லாமியர்கள்!

80பார்த்தது
கோட்டைமேட்டில் அமைந்துள்ள பழமையான அகிலாண்டேஸ்வரி உடனமர் சங்கமேஸ்வரர் கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரை தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தேரோட்டம் நடைபெறுவதையொட்டி, கடந்த மே 4-ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. தொடர்ந்து, சுவாமி பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தார். குறிப்பாக, கோவை மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் இஸ்லாமியர்கள் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் தேர் செல்லும் வழிகளில் பக்தர்களுக்கு பிஸ்கட், கூல்ட்ரிங்க்ஸ் மற்றும் பழ வகைகளை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தது அனைவரின் பாராட்டையும் பெற்றது. இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
32 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த சித்திரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி