கோவை: வெள்ளிங்கிரி கோவிலுக்கு இரண்டாவது கும்கி யானை வரவழைப்பு

70பார்த்தது
வெள்ளியங்கிரி கோவிலில் பக்தர்கள் பாதுகாப்புக்காக இரண்டாவது கும்கி யானை சின்னத்தம்பி நேற்று வரவழைக்கப்பட்டுள்ளது. வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்ததால் பக்தர்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து, வனத்துறையினர் ஏற்கனவே நரசிம்மன் என்ற கும்கி யானையை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியிருந்தனர். தற்போது, பக்தர்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சின்னத்தம்பி என்ற மற்றொரு கும்கி யானையும் இணைந்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தடாகம் பகுதியில் பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி, ஒற்றை காட்டு யானைகளை அடர்ந்த காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபடுத்தப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி