தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மதபோதகர் ஜான் ஜெபராஜ் (37), கிறிஸ்தவ மதபோதகர் ஆவார். இவர் கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் 21-ம் தேதி தனது வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 3 சிறுமிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் புகார் அளித்தனர். அதன்பேரில் மதபோதகர் ஜான் ஜெபராஜை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த அவர் தலைமறைவானார். அவரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வந்தனர். விசாரணை நடந்த முடிவில் தலைமறைவாக இருந்த ஜான் ஜெபராஜை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் கோவை அழைத்துவந்து நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். வருகிற 25-ம் தேதி வரை ஜான் ஜெபராஜை நீதிமன்ற காவலில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக விரைவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.