கோவை: தங்க கட்டி விற்பனை கடை-ஜி. எஸ். டி அதிகாரிகள் சோதனை!

65பார்த்தது
கோவையில் ராஜவீதி பகுதியில் உள்ள உப்பாரா வீதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான லட்சுமி குபேரன் தங்க கட்டி விற்பனை கடையில் வருமான ஜி. எஸ். டி அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
லட்சுமி குபேரன் தங்க கட்டி விற்பனை கடையில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனைக்கான காரணம் இன்னும் விவரங்கள் வெளிவரவில்லை. மேலும், இந்த சோதனையில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்தும் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த இன்றும் நடைபெறும் என்பதால், சோதனை முடிந்த பின்னரே முழு விவரங்கள் தெரியவரும். இந்த சோதனை குறித்து சுரேஷ்குமார் தரப்பில் இருந்து எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி