கோவை: குடிப்பழக்கத்திற்கு அடிமையான வாலிபர் தூக்கிட்டு சாவு

74பார்த்தது
கோவை: குடிப்பழக்கத்திற்கு அடிமையான வாலிபர் தூக்கிட்டு சாவு
கோவை ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் சஞ்சய் (29). டிப்ளமோ படித்து விட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்தார். அவரது குடும்பத்தார் வேலைக்குச் செல்லும்படி கண்டித்து வந்தனர். இந்நிலையில் சஞ்சய் அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் சென்று வசிக்க துவங்கினார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சஞ்சய்க்கு விபத்து ஏற்பட்டு அதில் தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

 மேலும் சஞ்சய் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதன் காரணமாக மனஉளைச்சலில் இருந்து வந்த சஞ்சய் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த கடைவீதி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி