கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது வாலிபருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். மருத்துவப் பரிசோதனைக்காக அவரை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு 17 வயது மட்டுமே ஆவது மருத்துவர்களுக்குத் தெரியவந்தது.
உடனடியாக கோவை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், நேரில் சென்று விசாரித்த குழந்தைகள் நல அதிகாரிகள், மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், காவல்துறையினர் சிறுமியின் கணவரான வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.