பொள்ளாச்சி: 1750 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

75பார்த்தது
பொள்ளாச்சி: 1750 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, வாகனங்களில் கொண்டு வரப்படும் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யும் நடவடிக்கையிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று திருவள்ளுவர் திடல் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் ரோடுகளில், நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அவ்வழியாக சரக்கு ஏற்றி வந்த வாகனங்களை அதிகாரிகள் சோதனையிட்ட போது, பொருட்களோடு பொருட்களாக பதுக்கி பிளாஸ்டிக் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, நகராட்சி அலுவலகத்துக்கு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு, பிளாஸ்டிக் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் மூன்று வாகனங்களில் இருந்து 30 மூட்டைகளில் 1750 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி