கோவை: விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் -நட்ராஜ் பேட்டி

74பார்த்தது
சினிமா சூட்டிங் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று (டிசம்பர் 22) கோவை வந்திருந்த பிரபல ஒளிப்பதிவாளரும் திரைப்பட நடிகருமான நட்டி நட்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், படங்கள் குறித்த விமர்சனங்களை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும், காசு கொடுத்து படம் பார்க்கிறார்கள். அதில் உள்ள நிறைகுறைகளை சொல்லத்தான் செய்வார்கள். அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான், தவறாக இருந்தால் நாம் நிச்சயம் திருத்திக்கொள்ள வேண்டும். 

ஓடிடி தளம் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, ஓடிடி தளத்தில் என்ன பிரச்சனை இருக்கின்றது? அது பரிணாம வளர்ச்சி, நாம் தற்போது போனில் படம் பார்க்கும் அளவிற்கு வந்து விட்டோம். இன்னமும் விருச்சுவல் ரியாலிட்டியாக படம் பார்க்கும் அளவிற்கு வந்து விடுவோம். இது வளர்ந்து கொண்டே தான் இருக்கும். அந்த அளவிற்கு நாம் நம்மை பாதுகாத்துக் கொள்வதும் வளர்த்துக் கொள்வதும் சிறந்தது என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி