கோவை மாவட்டம் சூலூர் சிந்தாமணிபுதூரில் புதிதாக அமைக்கப்பட்ட காவல் உதவி மையம் திறப்பு விழா நேற்று (டிசம்பர் 31) நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த மையத்தில் சிசிடிவி கட்டுப்பாட்டு மையமும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்யும் ஒலிப்பெருக்கி மையமும் செயல்பட உள்ளது. சிக்னலில் நிற்கும் பொதுமக்கள் ரசிக்கும் வகையில் ஒலிபெருக்கி மூலம் மெல்லிய இசையில் திரைப்பட பாடல்கள் ஒலிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கருமத்தம்பட்டி டிஎஸ்பி தங்கராமன், சூலூர் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை, பள்ளபாளையம் பேரூராட்சித் தலைவர் பி. எஸ் செல்வராஜ், கோவை தெற்கு மாவட்ட திமுக துணைத் தலைவர் பி. கே சாமிநாதன் மற்றும் எஸ். ஐ மோகன்தாஸ் விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், செய்தியாளரிடம் பேசிய மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், மாவட்ட எல்லை பகுதியும் மாநகர எல்லையையும் இணைக்கும் பகுதியில் அமைந்துள்ள இந்த காவல் உதவி மையம் பொதுமக்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டுள்ளது என கூறினார்.