*பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல். விற்பனைக்கு வைத்திருந்த நபர்கள் கைது. *
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு. பத்ரிநாராயணன், இ. கா. ப. , * அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று *(18. 05. 2023)* பொள்ளாச்சி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான *மர பேட்டை சந்திப்பு அருகே* சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த 1)ராஜேந்திரன் மகன் *சிந்து பாத்தான்(27)*, 2) பித்தம் பர்ஜா மகன் *முஹேஜா(32)*, 3) சலீம் மகன் *மனுஅகமது (27)*, 4)பன்சிதர் முனி மகன் *அம்பர்நாத் முனி(25)* ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து *12 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை* பறிமுதல் செய்து, மேற்படி நபரைகளை காவல்துறையினர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் *மாவட்ட காவல் கண்காணிப்பாளர்* அவர்களது நடவடிக்கையின் பேரில் கடந்த *01. 01. 2023 முதல் தற்போது வரை* காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட *310 நபர்கள்* மீது *235 வழக்குகள்* பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் *476. 851 கிலோ கிராம்* எடையுள்ள *கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள்* பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் *94981-81212* மற்றும் வாட்ஸ்அப் எண் *77081-00100* என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.