உக்கடம்: பெரிய குளத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்

50பார்த்தது
உக்கடம்: பெரிய குளத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்
கோவை உக்கடம் பெரிய குளத்தில் ஆகாயத்தாமரைகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக அங்கு படகு சவாரி மேற்கொள்வதில் ஆபத்து ஏற்படும் நிலை இருந்தது. இதனை அறிந்த மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். பெரிய குளத்தில் பரவியுள்ள ஆகாயத்தாமரைகளை நவீன பொக்லைன் இயந்திரம் உதவியுடன் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆகாயத்தாமரைகளை விரைவாக அகற்றும்படி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி