கோவை: ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் போராட்டம்!

61பார்த்தது
கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், தங்கள் பணி நிரந்தரத்தையும் ஊதிய உயர்வையும் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2021-ம் ஆண்டு திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியின்படி ஒப்பந்த பணி நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்றும், ஒப்பந்த முறையை ரத்து செய்து நேரடி ஊதியம் வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
அதேபோல், அரசாணை எண் 62 மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், மாத சம்பள ரசீது தரப்பட வேண்டும், ESI மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
மாநகராட்சி நிர்வாகம் ரூ. 770 சம்பளம் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ள நிலையில், தற்போது ரூ. 540 மட்டுமே வழங்கப்படுவதாகவும், இதுபற்றி கேட்கப்பட்டும் பதிலளிக்க மறுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபடுவோம் என தூய்மை பணியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி