கோவை: திமுகவை கண்டித்து பாஜகவினர் கருப்புக்கொடி போராட்டம்!

70பார்த்தது
தி. மு. க ஆட்சியில் ஊழல் இல்லாத துறைகளே இல்லை, படுகொலை நடக்காத நாளே இல்லை, தினசரி பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது, குடிநீரை கோட்டை விட்டு தமிழக மக்களை குடிகாரர்களாக்கியே விட்டார்கள், தி. மு. க ஆட்சியில், தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என கோவை மாநகர முழுவதும் உள்ள பா. ஜ. க வினர் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, காந்திபுரம் ராம்நகரில் உள்ள கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் இல்லத்திலும், கோவை மாவடத்தில் உள்ள அனைத்து பா. ஜ. க நிர்வாகிகள் வீட்டு முன்பாக தி. மு. க அரசை கண்டித்து கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி