கோவை: பயணிகள் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக வர அறிவுறுத்தல்

68பார்த்தது
கோவை: பயணிகள் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக வர அறிவுறுத்தல்
காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவல்காரர்கள் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்த வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 இந்திய விமான நிலைய ஆணையத்தின் உத்தரவின்படி, கோவை விமான நிலையத்திலும் தற்போது கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை கூடுதல் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. பயணிகள் தங்கள் விமான நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்கு வந்து, தங்களது உடைமைகளை சோதனைக்கு உட்படுத்தி ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று விமான நிலைய இயக்குனர் சம்பத் குமார் இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி