கோவை: நில மோசடி; இரண்டு பேர் கைது

85பார்த்தது
கோவை: நில மோசடி; இரண்டு பேர் கைது
கோவை மாவட்டத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் அபகரித்த வழக்கில் இரண்டு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். ஆலாம்பாளையம் குள்ளப்பள்ளி தோட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மனைவி சரஸ்வதிக்கு அரசூர் பகுதியில் 5½ சென்ட் நிலம் உள்ளது. 

இந்த நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த சத்யமூர்த்தி (50), விஜயராகவன், ஆறுமுகம் மற்றும் மணி ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து வேறு ஒருவருக்கு விற்று மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. 

இதுகுறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சத்யமூர்த்தி, ஆறுமுகம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விஜயராகவன், மணி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த மோசடி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி