கோவை: திருடர்களை கைது செய்த K. G சாவடி போலீசாருக்கு பாராட்டு!

67பார்த்தது
கோவை மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட K. G சாவடி காவலர்கள், சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்ட இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களில் ஒருவர் பொள்ளாச்சியைச் சேர்ந்த மோகன்குமார், மற்றவர் திருப்பூரைச் சேர்ந்த சதீஸ்வரன் எனத் தெரியவந்தது. அவர்களிடம் கையுறை, செல்போன்கள், ஸ்க்ரூடிரைவர் உள்ளிட்ட திருட்டு பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இவர்கள் K. G சாவடியில் தூங்கிக்கொண்டிருந்த நபரிடமிருந்து செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்காக நேர்த்தியாக பணியாற்றிய காவலர்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நேற்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி